Jan 20, 2017

ஸ்ரீ முத்தாரம்மன் கதை - 1 - வரசித்தி விநாயகர் துதி

திருவும் கல்வியும் சீரும்சிறப்பும் உன்

திருவடிப் புகழ் பாடும் திறமும் நல்
உருவும் சீலமும் ஊக்கமும் தாழ்வுறா
உணர்வும் தந்து எனது உள்ளத்து அமர்ந்தவா !
குருவும் தெய்வமும் ஆகி அன்பாளர் தம்
குறை தவிர்க்கும் கு ணப்பெருங் குன்றமே
வெருவும் சிந்தை விலகக் கஜானனம்
விளங்கும் சித்தி விநாயக வள்ளலே!!



அடியார்கள் வேண்டும் வரங்களைக் கொடுத்து, அஷ்டமாசித்திகளையும் அளிக்க வல்ல ஸ்ரீ வரசித்தி விநாயகரை பணிந்து, குலசேகரபட்டிணத்தில் குடிக்கொண்டிருக்கும் அன்னை முத்தாரம்மனின் மாஹாத்மியத்தை எழுத ஆரம்பிக்கின்றேன்.

(ஸ்ரீ முத்தாரம்பிகை மாஹாத்மியம் என்னும் தொடரில் இருந்து எடுக்கப்பட்டது)

Posted by Mutharamman Satsangam

No comments:

Post a Comment