Mar 20, 2017

சீதளா அஷ்டமி (20.03.2017)






பவுர்ணமியை அடுத்து வரும் தேய்பிறை எட்டாம் திதி, அஷ்டமி எனப்படும். இதை, சீதளா அஷ்டமி என்பர். 'சீதளம்' என்றால் குளிர்ச்சி. இத்திதி, பங்குனி மாதத்தில் முக்கியத்துவம் பெறும். காரணம், இது, கோடை துவங்கும் காலம் என்பதால், வெப்ப நோயான அம்மை மக்களைத் தாக்கும். இதிலிருந்து தங்களை காத்துக் கொள்ள அம்பாளை வழிபடுவர், மக்கள்.

ராஜஸ்தானில் சீதளா அஷ்டமியை மிகப்பெரிய விழாவாகக் கொண்டாடுவர். காரணம், அது பாலைவனப்பகுதி என்பதால், வெப்பத்தால் ஏற்படும் நோய்களில் இருந்து தங்களை காத்துக் கொள்ள சீதளாதேவி வழிபாட்டை மேற்கொள்வர். தமிழகத்தில், சீதளாதேவியை, மாரியம்மன் என்கிறோம்.

ஒரு சமயம், தேவர்களுக்கு தொல்லை கொடுக்க எண்ணிய அசுரர்கள், தங்கள் குரு சுக்கிராச்சாரியார் உதவியுடன், தீய சக்திகளை ஏவி விட்டனர். இதனால், கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்பட்டனர், தேவர்கள். உடலில், அம்மை கொப்புளங்கள் ஏற்பட்டன. தேவலோக வைத்தியர்களான அஸ்வினிதேவர்கள் அளித்த வைத்தியம் பலன் தரவில்லை. எனவே, சிவபெருமானை சரண் அடைந்து, தங்களை நோயில் இருந்து காக்கும்படி வேண்டினர். தேவர்களின் துயர் துடைக்க, சிவனின் ஜடையில் இருந்த சந்திரனிடமிருந்தும், கங்கையிடமிருந்தும் பேரொளி தோன்றியது.

பார்வதியின் அம்சமாக மாறிய அந்த ஒளி, சீதளாம்பிகை என்று பெயர் பெற்று, அம்பாளாக வடிவெடுத்தது. இந்த தேவியை வழிபடுவதற்கென சில மந்திரங்களை தேவர்களுக்கு கற்றுக்கொடுத்தார் சிவன். 'சீதளாஷ்டகம்' எனப்பட்ட இந்த ஸ்தோத்திரத்தைக் கூறி, அம்பாளை வழிபட்டால், வெப்பநோய் தீரும் என அருள்பாலித்தார்.

அம்பாளின் சிரசு, முறத்தினாலும், கையில் குடம் மற்றும் துடைப்பத்துடன், கழுதை வாகனத்தில் காட்சி தருகிறாள். லலிதா சகஸ்ர நாமத்தில், அம்பாளின் ஆயிரம் பெயர்களைச் சொல்லி வணங்கும் போது, 'சீதளாயை நமஹ' என்று வருகிறது.

சீதளாதேவிக்கு உகந்த திதி தேய்பிறை அஷ்டமி; குறிப்பாக, பங்குனி மாத தேய்பிறை அஷ்டமி. இந்நாளில் சீதளாதேவியையோ, மாரியம்மனையோ வழிபட்டு, நோயற்ற வாழ்வு பெறுவோம்.

'சீதளாஷ்டகம்' என்ற கீழ்க்கண்ட ச்லோகம் ஸ்காந்த புராணத்திலுள்ளது. பொதுவாக வெப்பம், சூடு அதிகமாகி அதன் காரணமாக ஏற்படக்கூடிய கொடிய நோய்களிலிருந்து விடுபட்டு, உடலும் மனமும் குளிர்சியடைய சீதளா தேவியின் அருளை வேண்டிச் சொல்லக்கூடிய துதி இது. விஸ்போடனம் என்று சொல்லக் கூடிய வெடிவிபத்துகள், குண்டு வெடிப்புகள் ஆகியவை நிகழாமல், விபத்துகளை தவிர்ப்பதற்கும் இந்த ச்லோகம் மிகவும் சிறந்தது..

ஶ்ரீசீதளாஷ்டகம்

ஶ்ரீ கணேசாய நம: 

அஸ்ய ஶ்ரீ சீதளா ஸ்தோத்ரஸ்ய. மஹாதேவ ரிஷி: அனுஷ்டுப் சந்த: சீதளா தேவதா, லக்ஷ்மீர் பீஜம், பவானீ சக்தி: ஸர்வ விஸ்ஃபோடக நிவ்ருத்யர்த்தே ஜபேவினியோக:

1. வந்தேஹம் சீதளாம் தேவீம் ராஸபஸ்தாம் திகம்பராம்
மார்ஜினீகலசோபேதாம் சூர்ப்பாலம்க்ருத மஸ்தகாம்.

2. வந்தேஹம் சீதளாம் தேவீம் ஸர்வரோக பயாபஹாம்
யாமாஸ்யாத நிவர்த்தேத விஸ்ஃபோடகபயம் மஹத்.

3. சீதளே சீதளே சேதி யோ ப்ரூயாத் தாஹபீடிதம்
விஸ்ஃபோடகபயம் கோரம் க்‌ஷிப்ரம் தஸ்ய ப்ரணச்யதி.

4. யத்ஸ்வாமுதகமத்யே து த்ருத்வா ஸம்பூஜயேன் நர: 
விஸ்ஃபோடகபயம் கோரம் க்ருஹே தஸ்ய ந ஜாயதே.

5. சீதளே ஜ்வரதக்தஸ்ய பூதிகந்தயுதஸ்ய ச
ப்ரநஷ்ட சக்‌ஷுஷ: பும்ஸ: த்வாமாஹுர் ஜீவனௌஷதம்.

6. சீதளே தனுஜான் ரோகான் ந்ரூணாம் ஹரஸி துஸ்த்யஜான்
விஸ்ஃபோடகவிதீர்ணானாம் த்வமேகாம்ருதவர்ஷிணீ.

7. களகண்டக்ரஹா ரோகா யே சான்யே தாருணா ந்ரூணாம்
த்வதனுத்யானமாத்ரேண சீதளே யாந்தி ஸம்க்ஷயம்.

8. ந மந்த்ரோ நௌஷதம் தஸ்ய பாபரோகஸ்ய வித்யதே
த்வாமேகாம் சீதளே தாத்ரீம் நான்யாம் பச்யாமி தேவதாம்.

9. ம்ருணாளதந்துஸத்ருசீம் நாபிஹ்ருன்மத்ய ஸம்ஸ்திதாம்
யஸ்த்வாம் ஸம்சிந்தயேத் தேவி தஸ்ய ம்ருத்யுர் ந ஜாயதே.

10. அஷ்டகம் சீதளா தேவ்யா: யோ நர: ப்ரபடேத் ஸதா
விஸ்ஃபோடகபயம் கோரம் க்ருஹே தஸ்ய ந ஜாயதே.

11. ச்ரோதவ்யம் படிதவ்யம் ச ச்ரத்தாபக்தி ஸமன்விதை:
உபஸர்கவிநாசாய பரம் ஸ்வஸ்த்யயனம் மஹத்.

12. சீதளே த்வம் ஜகன்மாதா சீதளே த்வம் ஜகத்பிதா
சீதளே த்வம் ஜகத் தாத்ரீ சீதளாயை நமோ நம:

13. ராஸபோ கர்தபஸ்சைவ கரோ வைசாகனந்தன:
சீதளாவாஹனஸ்சைவ தூர்வாகந்தநிக்ருந்தன:

14. ஏதானி கரநாமானி சீதளாக்ரே து ய: படேத்
தஸ்ய கேஹே சிசூனாம் ச சீதளாருங் ந ஜாயதே.

15. சீதளாஷ்டகமேவேதம் ந தேயம் யஸ்ய கஸ்யசித்
தாதவ்யம் ச ஸதா தஸ்மை ச்ரத்தாபக்தியுதாய வை.

இதி சீதளாஷ்டகம் ஸம்பூர்ணம்.

முத்தாரம்மே சரணம் !


Posted by Mutharamman Satsangam

No comments:

Post a Comment